படம் : பொல்லாதவன்
இசை : G.V ப்ரகாஷ்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், யோகி B & சுனிதா சாரதி
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்என் விழி எங்கும் பூக்காலம்உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடிஎடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடிமின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்என் விழி எங்கும் பூக்காலம்உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடாஎடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடிக்குதடிமுதன்முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலேதலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் பறித்தது தூக்கத்திலேகாலைத் தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளேகிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளேகாதலே ஒருவகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமேவவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமேஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடாஎடை குறையுதே தூக்கம் தொலையுதேஅய்யோ பைத்தியமே பிடிக்கிறதேஎன் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலேபக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலேகாதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலேஓ குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலேஊ ஆ ...ஆ ஊ ஆ.... ஊ ஆ ரா....... ரா ரேஓ... காதலும் ஒருவகை போதைதானே உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போலஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால் புன்னகை செய்துகொஞ்சும் தாய்போலஉடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடாஎடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடாமின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்என் விழி எங்கும் பூக்காலம்உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே அய்யோ இது எனக்குப் பிடிக்குதடாஎடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்குதடாஆ... ஆ....ஆ ஆ .. ஆ ஆ ...ஆ ஆ.....
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
பிள்ளையின் கதறல்
பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
ஒரு பேரரசன் புலம்பல்
நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தது நாசி
சிலை வடி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்
புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக் கறி பொறிப்பதுவோ
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ
மன்னன் ஆளுவதோ...
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ
களங்களும் அதிர களிறுகள் பிளிற
சோழம் அழைத்து போவாயோ
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை அதுவரை...
தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே.. அழாதே
நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
படம் : ஆயிரத்தில் ஒருவன்
இசை : G.V ப்ரகாஷ்
பாடியவர் : ஆண்ட்ரியா
மாலை நேரம்மழை தூறும் காலம்என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்நீயும் நானும்ஒரு போர்வைக்குள்ளேசிறு மேகம் போலே மிதக்கிறேன்ஓடும் காலங்கள்உடன் ஓடும் நினைவுகள்வழி மாறும் பயணங்கள்தொடர்கிறதேஇது தான் வாழ்க்கையாஒரு துணை தான் தேவையாமனம் ஏனோ என்னையே கேட்கிறதேஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்ததுகவிதை ஒன்று முடிந்ததுதேடும் போதே தொலைந்தது - அன்பேஇது சோகம் ஆனால் ஒரு சுகம்நெஞ்சின் உள்ளே பரவிடும்நாம் பழகிய காலம் பரவசம் - அன்பேஇதம் தருமே..உன் கரம் கோர்க்கையில்நினைவு ஓர் ஆயிரம்பின் இரு கரம் பிரிகையில்நினைவு நூறாயிரம்காதலில் விழுந்த இதயம்மீட்க முடியாததுகனவில் தொலைந்த நிஜங்கள்மீண்டும் கிடைக்காததுஒரு காலையில் நீ இல்லைதேடவும் மனம் வரவில்லைபிரிந்ததும் புரிந்ததுநான் என்னை இழந்தேன் எனஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்ததுகவிதை ஒன்று முடிந்ததுதேடும் போதே தொலைந்தது - அன்பேஇது சோகம் ஆனால் ஒரு சுகம்நெஞ்சின் உள்ளே பரவிடும்நாம் பழகிய காலம் பரவசம் - அன்பேஇதம் தருமே..ஒரு முறைவாசலில்நீயாய் வந்தால் என்ன?நான் கேட்கவே துடித்திடும்வார்த்தை சொன்னால் என்ன?இரு மனம் சேர்கையில் பிழைகள்பொறுத்து கொண்டால் என்ன?இரு திசை பறவைகள் இணைந்துவிண்ணில் சென்றால் என்ன?என் தேடல்கள் நீ இல்லைஉன் கனவுகள் நான் இல்லைஇரு விழி பார்வையில்நாம் உருகி நின்றால் என்ன?மாலை நேரம் மழைத்தூறும்..ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது..