RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

எம்மா எம்மா காதல் பொன்னம்மா - 7ஆம் அறிவு

படம் : 7ஆம் அறிவு 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 
பாடியவர் : SPB, ஸ்வேதா மேனன் 
விரும்பி கேட்டவர் : மஹாலக்ஷ்மி  

எம்மா எம்மா காதல் பொன்னம்மா

நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம்போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கனவுக்குள்ளே அவ வைச்சேனே
என் கண்ண ரண்ட திருடிப் போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சு காத்த வாங்கிப் போனாளே



பொம்பளைய நம்பி
கெட்டுப் போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் 
இப்ப கடைசியில் நின்னேன்
முத்து எடுக்க போனா 
உன் மூச்டங்கும் தன்னால்
காதல் முத்தெடுத்த பின்னால் 
மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முள்ளுடா
அதை கடந்து போனா ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை
எம்மா எம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா
ஓட்ட போட்ட மூங்கில்
அது பாட்டுப் பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்டப் பின்னும்
மனம் உன்ன பத்திப் பாடும்
வந்துப் போனதாரு
ஒரு நந்தவனத்தேரு
நம்பி நொந்து போனன் பாரு
அவ பூவு இல்லை நாறு
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல் நெருடாதே
மனம் தாங்காதே  தாங்காதே
வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டிப் போங்கடா
எம்மா எம்மா காதல் பொன்னம்மா

நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம்போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கனவுக்குள்ளே அவ வைச்சேனே
என் கண்ண ரண்ட திருடிப் போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சு காத்த வாங்கிப் போனாளே…..

வெட்டிவேரு வாசம் - முதல் மரியாதை

படம் : முதல் மரியாதை
இசை : இளையராஜா
பாடியவர் :மலேசியா வாசுதேவன், ஜானகி
விரும்பி கேட்டவர் : உமா 

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கும் வாசம் உண்டு பூமிக்கும் வாசமுண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே..!
வெட்டிவேரு வாசம்...

பச்சகிலியோ தொட்டுகிடுச்சி கீச்சுகிலியோ ஒத்துகிடுச்சி  
வச்ச நெருப்பு பத்திகிடுச்சி பச்சை மனசு பத்திகிடுச்சி
கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்க சுத்தாது
சாமி கிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சிகுள்ள தீய வச்சி பொத்திவச்சவங்க யாரு

வெட்டிவேரு வாசம்...

ஒன்ன கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள தான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாம தான் தத்தளிக்கிறேன், காணாம தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இது, பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ளே குண்டு வைக்க கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சி பேசும்
சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டிவேரு வாசம்... 
இப்பாடலின் வீடியோ இங்கே..

வா வா நிலவப்புடிச்சித்தரவா - நான் மகான் அல்ல

படம் : நான் மகான் அல்ல 
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ராகுல் நம்பியார்
வரிகள் : முத்துகுமார் 
வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா
வா வா..

வானத்தில் ஏறி ஏணைக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ

கவலை நம்மை சில நேரம் கூரைப்போட்டுக்கொண்டாடும்
நீ என்னைத் தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலைச்சேரும் நதியாவும் தன்னைத்தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை
புரிந்தாலும் துயரம் இல்லை
வா வா..

ஆஹா ஹா ஹா இரவைப்பார்த்து மிரலாதே
இதயம் வேர்த்துத் துவலாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகுத் தெரியாதே
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்துப்போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
வா வா..

அவ என்ன என்ன - வாரணம் ஆயிரம்

படம் : வாரணம் ஆயிரம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக், பிரசன்னா
வரிகள் : தாமரை 
விரும்பி கேட்டவர் : புகழேந்தி

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (அவ என்ன )


ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒ - ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா


அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…


எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ -.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!


துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ(3)



அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல..


வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ(3)



அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...


ஒண்ணுக்குள்ள ஒண்ணா...


தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே..
இப்பாடலின் வீடியோ இங்கே..
Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape