![]() |
இசை : இளையராஜா
பாடியவர் :மலேசியா வாசுதேவன், ஜானகி
விரும்பி கேட்டவர் : உமா
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கும் வாசம் உண்டு பூமிக்கும் வாசமுண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே..!
வெட்டிவேரு வாசம்...
பச்சகிலியோ தொட்டுகிடுச்சி கீச்சுகிலியோ ஒத்துகிடுச்சி
வச்ச நெருப்பு பத்திகிடுச்சி பச்சை மனசு பத்திகிடுச்சி
கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்க சுத்தாது
சாமி கிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சிகுள்ள தீய வச்சி பொத்திவச்சவங்க யாரு
வெட்டிவேரு வாசம்...
ஒன்ன கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள தான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாம தான் தத்தளிக்கிறேன், காணாம தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இது, பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ளே குண்டு வைக்க கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சி பேசும்
சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்
வெட்டிவேரு வாசம்...
இப்பாடலின் வீடியோ இங்கே..