RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

கிட்டே நெருங்கி வாடி

படம் : டிஷ்யூம்
இசை : விஜய் அந்தோனி
பாடியவர்கள் : காயத்ரி & சுக்விந்தர் சிங்

விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்

ஏய் கிட்டே நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி
பட்டா எழுதி தாடி பஞ்சாமிர்த உதட்டுக்காரி
தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
தேக்கு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டுக்காரா
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
தேக்கு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் cake உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

பொத்தி வச்ச புயலா நீ தங்கம் கொட்டி வச்ச வயலா நீ
கட்டி வச்ச பிரியாணி உன்னை திங்கப்போறேன் வர்ரியா நீ
சாத்தி வச்ச கதவா நீ உள்ள ஊத்திவச்ச மதுவா நீ
சேத்து வச்ச பணமா நீ உன்னை எண்ணப்போறேன் கொடுடா நீ
தெப்பக்குளத்துல மூழ்கி குளிக்கையில் ?
ரெட்டை எறும்புகள் உன்னை கடிக்கையில் சக்கர நோயில செத்துடுச்சே

தேக்கு முதுகுக்காரா…
தேக்கு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க அந்த மீசை துடிக்குதேடி

ஆஆ… அன்னா ஒருத்தி போறா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா
அன்னா ஒருத்திபோடா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா

தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
தேக்கு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி

சிலுத்துக்கும் மயிலா நீ என்னை முட்ட வந்த முயலா நீ
விரல்லுல மருதானி இப்போ வைக்கபோறதில்லையா நீ
டாய் சுட்டெரிக்கும் பகலா நீ என்னை சொக்கவைக்கும் இரவா நீ
எட்டி வச்சி மெதுவா நீ எல்லை தாண்டி வரும் களவாணி
வங்கக்கடலிலே வங்கபுயல் சின்னம் பட்டுன்னு கரையை தாண்டிடுச்சே
நெஞ்சிக்கடலிலே வந்தபுயல் சின்னம் போதையில் பட்டுன்னு பொங்கிடுச்சே

தேக்கு முதுகுக்காரி..

தேக்கு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
டாஇ கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டதாடா
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
தேக்கு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் cake உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

இப்பாடலின் வீடியோ இங்கே..


நியூ யார்க் நகரம்

படம் : சில்லுனு ஒரு காதல்
இசை : ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர் : ஏ.ஆர்.ரகுமான்
வரிகள் : வாலி
விரும்பி கேட்டவர் : இசக்கிமுத்து


நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்,
தனிமை அடர்ந்தது, பனியும் படர்ந்தது

கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே, நானும் மெழுகுவத்தீயும்
தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ

நியூ யார்க் நகரம்...

பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஓரு முத்தம் தந்து, காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை நாவல் எடுக்க நீ இங்கே இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னைத் தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே, நீயும் அங்கே; இந்தத் தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ?
வான் இங்கே, நீலம் அங்கே, இந்த உவமைக்கு இருவரும் விளக்கம் ஆனதேனோ?
நியூ யார்க் நகரம்...

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்னத் தேனா?
ஜில் என்று பூமி இருந்தும் இந்தத் தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனதேனோ?
வா அன்பே, நீயும் வந்தால் செந்தணல் கூடப் பனிக்கட்டி போலே மாறுமே
நியூ யார்க் நகரம்...
இப்பாடலின் வீடியோ இங்கே..

நான் போகிறேன் மேலே மேலே

படம்: நாணயம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் போலே

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

நான் போகிறேன்..


கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா

நானானனான நான நான நானானனான நான நான
நானானனான நான நான ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான
நானானனான நான நான நானானனான நான நான

என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேன்

நான் போகிறேன்..


நானானனான நான நான நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான நானானனான நான நான
நானானனான நான நான

இப்பாடலின் வீடியோ இங்கே..

அதிரி புதிரி ஆரம்பம்

படம்: திரு திரு துரு துரு
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: ராஹுல் நம்பியார், ஜனனி
அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமலி துமலி சத்தம் சத்தம்
கேரக்டர்தான் மாறுமோ நோ வே
கேரர் குணம் ஆகுமோ
நீ உடைகள் அணிந்த கூவம்தான்
பேச்சில் இல்லை சுத்தம் பத்தம் டூ மச்
அதிரி..

நம்ம பார்வைக்கே தெரியாத பக்டேரியா
அதை தேடி கண்டுபிடிச்சு க்ளீன் பண்றா
எல்லா திங்ஸையும் தினம் தொடைச்சு சைஸ் வாரியா
அதுக்கு டேய்லி ஆயுத பூஜை கொண்டாடுறா
பாத்ரூம் போறதுக்கு கூட டைம்டேபல்
ஷெடுல் போட்டு அதை ஃபோல்லோ பண்ணுறா
இவ கனவுல கூட ஏதோ கல்குலேட் பண்ணுறா டூ மச்
ஷகிரா ஆல்பம் கேட்கையில் கஜலு பஜனை போடுறா
டூ மச் டூ மச் டூ மச்

குறட்டை மொழியில் பூகம்பம்
விடிய விடிய தூக்கம் சோ வாட்
செவிகள் கிழிய ஹிப்ஹோப்பும்
ட்ரம்ஸும் மலரும் சத்தம் டாட்ஸ் ரைக்ட்
ஷேவ் பண்னவே சோம்பலோ ஹேய் ஹேய்
தாடியை பார்க்கவோ
காட்டுவாசி போல தோற்றம்
ஐயோ அக்கம் பக்கம் பாவம்
அதிரி..

தினம் ஏர்லி மார்னிங் ஃபைவ் க்லாக்
சுப்ரபாதம் ஃபுல் வாலுமில் ப்லே பண்ணுறா
ஹாட்டல் காரன் இட்லியில் மனுஃபேக்சுரிங் டேட் எங்கேங்குறா
ரோட்டுல யாராச்சும் குப்பை போட்டா
இவ பார்த்துட்டா சண்டைக்கு போறா
இவ கூட வாழ்வது என்னால முடியாது
முடியவே முடியாது ஐயோ நோ நோ

இப்பாடலின் வீடியோ இங்கே..

அழகாய் பூக்குதே

படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்
விரும்பி கேட்டவர் : பூஜா

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகாய்..

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
அழகாய்..

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
அழகாய்..

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
அழகாய்..

இப்பாடலின் வீடியோ இங்கே..

கனவா இல்லை காற்றா

படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
விரும்பி கேட்டவர் : செல்மென்ட்
கனவா... இல்லை காற்றா...
கனவா.. இல்லை காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே..
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?...........

கையில்..


நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...

நிலவில்...


காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.
பசியோ வலியோ தெரியாது...

காதல்...


உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..
உயரம் தூரம் தெரியாது...
உன்னை..
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்..
என்னால் தாங்க முடியாது..

கையில்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

நெஞ்சே நெஞ்சே

படம் : அயன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, மாலதி
வரிகள் : வைரமுத்து
விரும்பி கேட்டவர் : விஜயபாரதி

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில், ஏன் சேர்கிறாய்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னை காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும் பொய்யாக‌ க‌ண்டேனே

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை கொண்டால் தான் காத‌ல் ருசியாகும்

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா ஏய் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே

காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்று நம் பூமி ந‌மை விட்டு போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே ஏன் வ‌ருகிறாய்

இப்பாடலின் வீடியோ இங்கே..

வாராயோ வாராயோ

படம் : ஆதவன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : கபிலன்
பாடியவர்கள்: சின்மயி,மேகா, உன்னிக்கிருஷ்ணன்
விரும்பி கேட்டவர்: ஜோஷி
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா ஆ தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

ஓலைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா

வாராயோ வாராயோ காதல் கொள்ள...

நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே

நீ நீ நீ மை ஃபேர் லேடி
வாவா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ

வாராயோ வாராயோ மோனாலிஸா...
இப்பாடலின் வீடியோ இங்கே..

வானவில்லே வானவில்லே

படம்: ரமணா
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்
விரும்பி கேட்டவர்: விஜயபாரதி
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது
அள்ளிவந்த வண்ணங்களை
எங்கள் நெஞ்சில் நீ தூவு!
சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே
பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய்த் தென்றலே
வந்து நீ பாடு ஆராரோ..!
வானவில்லே..

எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூக்கூ..!
எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை உண்டு!
ஜாதி என்ன கேட்டுவிட்டு
தென்றல் நம்மை தொடுமா
தேசம் எது பாத்துவிட்டு
மண்ணில் மழை வருமா...
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே..
வானவில்லே..

எங்கிருந்து சொந்தம் வந்ததோ
நெஞ்சம் வேடந்தாங்கல்
இந்தக் கூட்டில் நானும் வாழவே
கேட்க வேண்டும் நீங்கள்
தாய்ப் பறவை சேகரித்து
ஊட்டுகின்ற உறவு
அதில் தானே வாழ்கிறது
உயிர்களின் அழகு!
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே..
வானவில்லே..
இப்பாடலின் வீடியோ இங்கே..

புலி உறுமுது புலி உறுமுது

படம் : வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோனி
விரும்பி கேட்டவர் : கண்ணா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...

ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வரான் பாரு வேட்டைக்காரன்..

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

யார் இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு ஆயுதம் போல் கூறு இவன்
இருபது நகங்களும் கழுகிடா
இவன் இருப்பதே உலகிக்கு அழகிடா
அடங்க மறுத்த உன்னை அழிச்சுடுவான்
இவன் அமிலத்தை மூண்டு தரம் குழிச்சுடுவான்
இவனோட நாயம் தனி நாயம்
அட இவனால அடங்கும் அநிநாயம்
போடு அடிய போடு போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

அச தோமா சக் கமைய தம சோம ஜோதி கமைய வித் ஜோம அமிர்தம் கமய ஓம் சாந்தி சாந்திகி

யார் இவன் யார் இவன் யார் இவன் ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை தான் எவனடா
இவனுக்கு இல்லடா கடி வாளம்
இவன் வரலாற்ற மாத்திடும் வரும் காலம்
திரு மூஞ்சி சேய் எல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்
போடு அடிய போடு போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...

ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வரான் பாரு வேட்டைக்காரன்

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

காதலியே காதலியே

படம் : ஜித்தன்
பாடியவர்: ஹரிஸ் ராகவேந்திரா
இசை: சிறிகாந்த் தேவா
விரும்பி கேட்டவர் : ஏசுராஜா

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்

எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்
இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்

உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே
கனவு மட்டும் எனக்கு உண்டு கண்ணை காணவில்லையே

கடற்கரை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால்தடம்
எந்தன் பாதம் எங்கே வைப்பேன் வந்து சொல்வாய் என்னிடம்

ஒரு வீணையை கைகளில் கொடுத்து என் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய்
ஒரு காதல் நாடகம் நடத்தி அட நீ எனை திரையிட்டு மறைத்தாய்

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

தூங்கும் போது கண்கள் இரண்டும் போர்வை கேட்க கூடுமோ
தண்ணீர் மீது பூக்கும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ

இறந்து போன காதல் கவிதை இரங்கல் கூட்டம் போடுதோ
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிறி குதித்து ஓடுதோ

ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன் எனை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய்
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதல் விடுமுறை நாளோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்

இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ

இப்பாடலின் வீடியோ இங்கே..

Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape