RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

நியூ யார்க் நகரம்

படம் : சில்லுனு ஒரு காதல்
இசை : ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர் : ஏ.ஆர்.ரகுமான்
வரிகள் : வாலி
விரும்பி கேட்டவர் : இசக்கிமுத்து


நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்,
தனிமை அடர்ந்தது, பனியும் படர்ந்தது

கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே, நானும் மெழுகுவத்தீயும்
தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ

நியூ யார்க் நகரம்...

பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஓரு முத்தம் தந்து, காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை நாவல் எடுக்க நீ இங்கே இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னைத் தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே, நீயும் அங்கே; இந்தத் தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ?
வான் இங்கே, நீலம் அங்கே, இந்த உவமைக்கு இருவரும் விளக்கம் ஆனதேனோ?
நியூ யார்க் நகரம்...

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்னத் தேனா?
ஜில் என்று பூமி இருந்தும் இந்தத் தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனதேனோ?
வா அன்பே, நீயும் வந்தால் செந்தணல் கூடப் பனிக்கட்டி போலே மாறுமே
நியூ யார்க் நகரம்...
இப்பாடலின் வீடியோ இங்கே..
Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape