RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

வெட்டிவேரு வாசம் - முதல் மரியாதை

படம் : முதல் மரியாதை
இசை : இளையராஜா
பாடியவர் :மலேசியா வாசுதேவன், ஜானகி
விரும்பி கேட்டவர் : உமா 

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கும் வாசம் உண்டு பூமிக்கும் வாசமுண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே..!
வெட்டிவேரு வாசம்...

பச்சகிலியோ தொட்டுகிடுச்சி கீச்சுகிலியோ ஒத்துகிடுச்சி  
வச்ச நெருப்பு பத்திகிடுச்சி பச்சை மனசு பத்திகிடுச்சி
கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்க சுத்தாது
சாமி கிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சிகுள்ள தீய வச்சி பொத்திவச்சவங்க யாரு

வெட்டிவேரு வாசம்...

ஒன்ன கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள தான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாம தான் தத்தளிக்கிறேன், காணாம தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இது, பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ளே குண்டு வைக்க கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சி பேசும்
சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டிவேரு வாசம்... 
இப்பாடலின் வீடியோ இங்கே..

வா வா நிலவப்புடிச்சித்தரவா - நான் மகான் அல்ல

படம் : நான் மகான் அல்ல 
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ராகுல் நம்பியார்
வரிகள் : முத்துகுமார் 
வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா
வா வா..

வானத்தில் ஏறி ஏணைக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ

கவலை நம்மை சில நேரம் கூரைப்போட்டுக்கொண்டாடும்
நீ என்னைத் தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலைச்சேரும் நதியாவும் தன்னைத்தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை
புரிந்தாலும் துயரம் இல்லை
வா வா..

ஆஹா ஹா ஹா இரவைப்பார்த்து மிரலாதே
இதயம் வேர்த்துத் துவலாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகுத் தெரியாதே
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்துப்போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
வா வா..

அவ என்ன என்ன - வாரணம் ஆயிரம்

படம் : வாரணம் ஆயிரம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக், பிரசன்னா
வரிகள் : தாமரை 
விரும்பி கேட்டவர் : புகழேந்தி

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (அவ என்ன )


ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒ - ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா


அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…


எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ -.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!


துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ(3)



அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல..


வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ(3)



அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...


ஒண்ணுக்குள்ள ஒண்ணா...


தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே..
இப்பாடலின் வீடியோ இங்கே..

மன்னிப்பாயா - விண்ணைத்தாண்டி வருவாயா

படம் : விண்ணைத்தாண்டி வருவாயா
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரேயா கோஷல்
வரிகள் : தாமரை
விரும்பி கேட்டவர் : புகழேந்தி
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
(ஒரு நாள்..)

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
(ஒரு நாள்..)

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
(ஒரு நாள்..)
(கண்ணே..)
இப்பாடலின் வீடியோ இங்கே..

ஊனே உயிரே - விண்ணைத்தாண்டி வருவாயா

படம் : விண்ணைத்தாண்டி வருவாயா
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : கார்த்திக்
வரிகள் : தாமரை
விரும்பி கேட்டவர் : புகழேந்தி
ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

நேற்றும் இரவில்
உன்னோடு இருந்தேன்
அதை நீயும்
மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட
விண்ணைத்தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா

உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில்தானே
இரு துருவம் சேறும் அந்த ஓர் இடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே..

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா
இப்பாடலின் வீடியோ இங்கே..

விடிய விடிய சொல்லித்தருவேன் - போக்கிரி ராஜா

படம் : போக்கிரி ராஜா
இசை :
விஸ்வநாதன்
பாடியவர் :
S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
விரும்பி கேட்டவர் : புயலமன்

விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்

விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்

மாலையில் மல்லிகை அந்தியில் பஞசனை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞசனை
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்

சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்

வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ
க்ல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காதா பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்

என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்

பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்

மார்ப்பில் குங்குமம் காரணம் சங்கமம்

ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி

சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே

விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்


ஆசையக் காத்துல - ஜானி

படம் : ஜானி
இசை : இளையராஜா
பாடியவர் :
S.P. ஷைலஜா
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
ஆசைய...

வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில
ஆசைய...

தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில
ஆசைய...
இப்பாடலின் வீடியோ இங்கே..

ஊனம் ஊனம் ஊனம் - பொற்காலம்

படம் : பொற்காலம்
இசை : தேவா
பாடியவர் : தேவா
விரும்பி கேட்டவர் : கார்த்தி
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது
ஊன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அதை விட அரிது

ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்

ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ

.. ..
கெட்ட பையன் எல்லாருமே கை இருந்தும் ஊனம்
அத கண்டிருக்கேன் நானும்,
நீங்க யார பாத்து ஊனமுன்னு சொல்றீங்கோ..
கடன் கொடுத்தவன் எதுர வந்தா கடன் பட்டவன் ஊமை
இத கண்டிருகோம் நாம
ஏங்க வாயிலாத ஜீவன்கள வையரிங்கோ
காட்சி இங்க நல்லாலே கண்ணு கூட வேணாங்கோ
வாழ்வு நெஞ்சில் இருக்கையிலே வாழ்வு கூட வேணாங்கோ..

ஊனம் என்னடா ஊனம்
அட.. ஞானம் தான வேணும்
அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும்

ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ ... ( 2 )

ஆத்தங்கர ஓரத்துல வளந்திருக்குது தென்ன
அது பகைச்சிருக்குது கன்ன
அதில் தேங்காய வெருத்தவங்க யாருங்கோ..

மதுரையில கோயிலைத்தான் பாத்ததுண்டா கண்ணு
அதில் ஒத்த கோபுரம் ஒன்னு
அதில் மீனாக்ஷி குடியிருக்கா பாருங்கோ
கண்ணதாசன் சொன்னாங்கோ
வைரமுத்து சொன்னாங்கோ
ஊனம் என்பது மனசு தான்னு உனக்கும் எனக்கும் சொன்னாங்கோ

ஊனம் என்னடா ஊனம்
அட.. ஞானம் தான வேணும்
அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும்

ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்

ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ

இப்பாடலின் வீடியோ இங்கே..

சின்னஞ்சிறு வயதில் - மீண்டும் கோகிலா

படம் : மீண்டும் கோகிலா
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கே.
ஜே. ஜேசுதாஸ், எஸ். பீ. ஷைலஜா

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சின்னஞ்சிறு வயதில்...

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி எனக்கோர்
காவியம் சொல்லு என்றான்

சின்னஞ்சிறு வயதில்...

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே...
மோதும் விரகத்திலே செல்லம்மா

சின்னஞ்சிறு வயதில்...
இப்பாடலின் வீடியோ இங்கே..

ஊரோரம் புளியமரம் - பருத்தி வீரன்

படம் : பருத்தி வீரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : பாண்டி, லக்ஷ்மி, சரோஜா, கலா
விரும்பி கேட்டவர்கள் : உமா & ப்ரியா

ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும்
நாம்பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையய்
கூடுனமே கூடுனமே கூட்டுவண்டிக் காளைபோலே
மாட்டுனமே மாட்டுனமே நாரப்பய கையுமேலே

நிறுத்துங்கடி ஏ நிறுத்துங்கடி நிறுத்துங்கறேன்ல
பாடுங்கடின்னா என்ன நக்கலா
ஏய் நீ வா நீ இங்கே வா எல்லாம் வரிசையா நில்லு
நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடணும் என்ன
யோவ் இங்க பாருய்யா கண்டபக்கம்லாம் கையவைச்சின்னா
உனக்கு மரியாதை இல்லை ஆமா
இங்க பாருய்யா வெக்கத்தை ஏய் அட்றா

நாடறிஞ்ச அழகிகளா நீங்க எங்க ஜோடி
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடி
கத்தரிப்பூ ரவுக்கை போட்ட சின்னப்பைங்கிளி
உன்னை Quarter-க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி

குத்து-ன்னா இப்படித்தான் குத்தனும்

ஆளில்லாத காட்டுக்குள்ளே பயலே
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி
Night எல்லாம் ஆட்டம் போட்டு
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா எனக்கு காலு
அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு
உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்ன
இந்த பருவமுள்ள பையங்கிட்டே
நீயும் பாசாங்கம் பண்ணாதடி பண்ணாதடி
பருவமுள்ள பையங்கிட்டே
நானும் பாசாங்கம் பண்ணவில்லை
பாசாங்கம் பண்ணுரன்டு நீயும்
அறிவுகெட்டு பேசாதடா நீ அறிவுகெட்டு பேசாதடா

அடி மாடிமேலே மாடிவெச்சு மாரளவு ஜன்னல் வெச்சு
அப்டி போடு சித்தப்பு
எட்டி எட்டிப் பாத்தாலுமே எரவப்பொண்டாட்டி நீதான்டி
ஆஹா ஆஹா ஆஹா
அடி காதறுந்த மூளி உன்னைக் கட்டுவன்டி தாலி
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு வெக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய்
பொசக்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடா
நெத்தியிலே ஆமோய்
நெத்தியிலே பொட்டுவைச்சு நீவரணும் சேலைகட்டி
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே
நீ மனசுவெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை
கோணாங்கிரப்பு வேட்டி குதிங்கால் உயர்த்தி கட்டி
ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு
புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும்வழியிலே
உங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கமுடியலை

போடா போடா பொடிப்பயலே புத்திகெட்ட மடப்பயலே
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானாம்
உனக்கும் எனக்கும் சண்டை இப்போ ஒடையப் போகுது மண்டை
அடியே குட்டப்புள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கவிடாது
ஆமோய்

என்ன நாயனகாரரே சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீயளே
வாயில வெச்சு ஊதவேண்டியதுதானே
நீங்க ஊதுரியளா நான் ஊதவா..
இப்பாடலின் வீடியோ இங்கே..

கெடைக்கல கெடைக்கல - பார்த்தேன் ரசித்தேன்

படம் : பார்த்தேன் ரசித்தேன்
இசை : பரத்வாஜ்
பாடியவர் : திப்பு
விரும்பி கேட்டவர் : குரு

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டுட்டு
பாதியில் இரங்கி பேகாதே
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி

எரியரேன்.
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

ஒஹ்...ஒஹ்...ஒஹ்...ஒஹ்...
ஒஹ்...ஒஹ்...ஒஹ்...ஒஹ்...

பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு
வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
ஹொ...!!!பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு
வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
பஸ்சு மிசுனு சொல்ல முடியாது
ரூட்டு எப்பொவும் மாரலாம்
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது
போர்டு மாத்தி ஓட்டலாம்
ஒண்ணு போன ஒண்ணு வரும்-அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்
பொண்ணு போனா என்ன வரும், *** தாடி வரும்
என் தலை எழுத்த ப்ரஹ்மனவன் எடது கையால்
கிருக்கிட்டான்

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு
இல்லயே...
ஆ... என்ன பதி கவி எழுத கன்னடசன் இல்லியயே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லயே
ஆம்பிளைங்க விடும் கன்னெரயும் shower-இல் குளிக்கும்
பெண்களே
செம்பரம்பக்கம் யேரிய போல வரண்டு போசு கண்களே
***** அது ஆண்களுக்கு சவுக்கடி
இதயமெல்லம் காயபட்டு ***ஸ்
அனிசயான இம்சையடி காதல் என்னும் நெருக்கடி

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டுட்டு பாதியில் இரங்கி
போகாதே.. போகாதே.. போகாதே..
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி
எரியரேன்...
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

இப்பாடலின் வீடியோ இங்கே..

ஓமன பெண்ணே - விண்ணைத்தாண்டி வருவாயா

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
வரிகள்: தாமரை
பாடியவர்கள்: பென்னி தியோல், கல்யாணி மேனன்
விரும்பி கேட்டவர் : ரமேஷ்

ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய்
கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒஹோ

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன் ஓஹோ
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்ந்திடும் பகலை இரவை ஓஹோ
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணைச் சேரானு
புல்லாங்குழல் பூந்துகையான நின் அழகே
நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

இப்பாடலின் வீடியோ இங்கே..

ஏழேழு தலைமுறைக்கும் - கோவா

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: கங்கை அமரன்
பாடியவர்கள்: பவதாரினி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன்

ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புறம் பண்ண புறம்
முல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம்
எல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம்
முல்லையாரு..
ஏழேழு...

வீரப்பாண்டி மாரியம்மா எங்குமுள்ள காளியம்மா
தாய் சீல காரியம்மா தந்தா வங்கடம்மா
பாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு
கூட்டி எடுத்துத் தந்த பாட்டு பொங்குதம்மா
பட்டிக்காட்ட விட்டுப்புட்டு பட்டணத்தில் குடி புகுந்து
மெட்டுகளை கட்டி தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு
ஆத்தி என்ன சொல்ல
அன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு
அப்பருந்து இப்ப வர எங்களுக்கு என்ன குறை
எப்போழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை
ஏழேழு...

அள்ளி உறளுல நெல்ல போட்டு
அழுத்தி அழுத்தி குத்துங்கடி
அத்த மகனைத்தான் பாத்துக்கிட்டு
அமுக்கி புடிச்சு குத்துங்கடி
நம்ம நெல்லு குத்துகிற அழகைக் கண்டு
மச்சான் நேருல வர்றத பாருங்கடி
அவன் நேருல வர்றத பார்த்துப்புட்டு
நம்ம நெஞ்சு துடிக்குது கேளுங்கடி

மேத்து மழை சாரலிலே மேஞ்சு வந்த மேகம் எல்லாம்
கோர்த்து தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேட்கும்
நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது
ஊர் அறிய கேட்கும்போடு உற்சாகமா தோணும்
அப்பனோட அறிவிருக்கு அன்னையோட அறவனைப்பு
சத்தியமா நிச்சயமா அஸ்திவரம் எங்களுக்கு
தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு
வயலுல வெளஞ்ச நெல்லு நகரத்த தேடி வந்து
பசிகளை தீர்ப்பதுப்போல் பாரு எங்க கதை
ஏழேழு...

ஹோசானா - விண்ணை தாண்டி வருவாயா

படம் : விண்ணை தாண்டி வருவாயா
இசை :
ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், suzaane, blaaze

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஒ ஒ ஹோசானா ஹோசானா

அந்த நேரம் அந்தி நேரம்
கண் பார்த்து கந்தலாகி போன நேரம்
ஏதோ ஆச்சே

ஒ வானம் தேடி வந்தாச்சி
அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு
போயே போச்சே

ஹோசானா.. என் வாசல் தாண்டி போனாலே
ஹோசானா.. வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன்
சுக்கு நூராகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

ஹோசானா.. வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா.. சாவுக்கும் பக்கம் நின்றேன்
ஹோசானா.. ஏன் என்றால் காதல் என்றேன்

Hey babe i never wanna know what'd be lika feel lika
I really wanna be here with you…
It's not enough to say that we are made for each other
It's love that is hosanna true...
Hossana'll be there when you're callin' out my name...
Hossana...feeling like my whole life has changed...
I never wanna be the same...
It's time we rearrange...
I take a step,you take a step, I'm here callin' out to youu...
Hello...Helloooooo…… Helloooooo……

வண்ண வண்ண பட்டு பூச்சி
பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ.. சொட்டு சொட்டாய்
தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே

ஹோசானா.. பட்டு பூச்சி வந்தாச்சா
ஹோசானா.. மேகம் உன்னை தொட்டாச்சா
கிளிஞ்சலாகிறேன் நான்
குழந்தை ஆகிரேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்து கொள்கிறேன்
Hello...Helloooooo

ஹோசானா.. என் மீது அன்பு கொள்ள
ஹோசானா.. என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசானா.. ம்ம் என்று சொல்லு போதும்
ஹோ.. ஹோசானா..

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா - தமிழ் படம்

படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்வேதா
ஓ முஹலை ஓ முஹலை

ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா

ஓ மஹ..


ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ
ரஹதுல்லா சோனாலி

ஓ மஹ..

ஹா ஹா ஹோஹோ
ஹா ஹா..

சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா

மஹ..


ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா

ஹோ மஹ..
இப்பாடலின் வீடியோ இங்கே..

பூவுக்கென்ன பூட்டு - பம்பாய்

படம்: பம்பாய்
இசை: AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: சுபா, அனுபாமா, நோவேல் ஜேம்ஸ், AR ரஹ்மான்
விரும்பி கேட்டவர் : ராதிகா
பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு
நீயும் நானும் யாருக்கு?
குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா
கைக்கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னான்னா
ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலைக்கு என்ன ஒரு கவலை?
எப்போதும் பரவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை
எப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை

நீ சிரிச்சா..


பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு

குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லை
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
வெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை

நீ சிரிச்சா..
இப்பாடலின் வீடியோ இங்கே..

பூங்காற்றிலே

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து
விரும்பி கேட்டவர் : ராதிகா
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில்..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா..
பூங்காற்றிலே..

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிக்கின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் சந்தனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடி வா..
பூங்காற்றிலே..

கண்ணில்..

வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் முன்னே
ஓடோடி வா..
பூங்காற்றிலே..
இப்பாடலின் வீடியோ இங்கே..

சின்ன மணிக்குயிலே

படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
கூக்கூ எனக் கூவுவது ஏனடி
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாடை செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே..

பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்க
நான் சாமியை வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே...
இப்பாடலின் வீடியோ இங்கே..

சிங்கம் என்றல் எம் தந்தை தான்..

படம்: அசல்
இசை : பரத்வாஜ்
பாடியவர் : பரத்வாஜ்


சிங்கம் என்றல்
எம் தந்தை தான்..
செல்வம் என்றல்
எம் தந்தை தான்..
கண் தூங்கினால்
துயில் நீங்கினால்
எம் தந்தை தான் !
எம் தந்தை தான் !
எல்லோருக்கும்
அவர் விந்தை தான்!
விண்மீன்கள் கடன் கேட்கும்
அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும்
அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள்
குளம் தாங்குமே!
அவர் பேரை சொன்னாலே
பகை நீங்குமே!
அழியாத உயிர்கொண்ட
எம் தந்தையே
ஆண்வடிவில் நீ என்றும்
எம் அன்னையே

வீரத்தின் மகனென்று
விழி சொல்லுமே!
வேழத்தின் இனமென்று
நடை சொல்லுமே!
நிலையான மனிதன் எனப்
பேர் சொல்லுமே!
நீதானே அசல் என்று
ஊர் சொல்லுமே!
உன் போல சிலரின்று
உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு
நிகராகுமா?

எப்போதும் தோற்காது
உன் சேவைதான்!
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்!
கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்தி தான்!
கடல்தாண்டிப் பொருள் ஈட்டும்
உன் கீர்த்தி தான்!
தலைமுறைகள் கழிந்தாலும்
உன் பேச்சுதான்
தந்தை எனும் மந்திரமே
என் மூச்சுதான்!

சிங்கம் என்றல்
எம் தந்தை தான்..

காற்றை நிறுத்தி கேளு

படம் : அசல்
இசை : பரத்வாஜ்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : சுனிதா மேனன்

காற்றை நிறுத்தி கேளு
கடலை அழைத்து கேளு
இவன் தான் அசல் என்று சொல்லும்
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா...

காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்..
முகத்தில் குத்துவான் பகைவன்
முதுகில் குத்துவான் நண்பன்
பகையை வென்று தான் சிரிப்பான்
நண்பரை மன்னிதழுவான்
போனான் என்று ஊர் பேசும்போது
புயல் என வீசுவான்
பூமிபந்தின் ஒரு பக்கம் மோதி
மறுபுறம் தோன்றுவான்
தோட்டங்களில் பூக்களிலும்
தோட்டா தேடுவான் !
தோழர்களின் பகைவரையும்
சுட்டே வீழ்த்துவான்
மாயமா ? மந்திரமா ?
தல போல வருமா... தல போல வருமா...

நித்தம் நித்தம் யுத்தம் - இவன்
நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுகில்லை
படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
படுக்கை முழுவதும் ரொக்கம்
காட்டுச் சிங்கம் போல் வாழ்ந்தும்
கண்களில் உறக்கமில்லை
ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை
உயர்வென்று பேசுவான்
சட்டங்களின் வேலிகளை
சட்டென்று தாண்டுவான்!
தர்மங்களின் கோடுகளைத்
தாண்டிட கூசுவான் !
மாயமா ? மந்திரமா ?
தல போல வருமா... தல போல வருமா...

Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape