படம்: பொறி
இசை: தினா
பாடியவர்கள்: M.பாலகிருஷ்ணா, மதுஸ்ரீ
இசை: தினா
பாடியவர்கள்: M.பாலகிருஷ்ணா, மதுஸ்ரீ
விரும்பி கேட்டவர்: சௌமியா
ஆண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பெண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
ஆண்: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்ல கோபம்
பெண்: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே
பேருந்தில்..
ஆண்: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் வருகிற முதல் கூச்சம்
பெண்: பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை
ஆண்: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
பெண்: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே
பேருந்தில்..
ஆண்: தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெண்: தேய்பிறை போல் படும் நகக் கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
ஆண்: செல்ஃபோன் சிணிங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
பெண்: எழுதும் கவிதையின் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே
பேருந்தில்...
இப்பாடலின் வீடியோ இங்கே..