RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

கொடியிலே மல்லிகப்பூ

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியோர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
விரும்பி கேட்டவர்: சௌமியா

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

மனசு தடுமாறும்
அது நெனச்சா நெரம் மாறும்

மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தட போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

பறக்கும் திசைஏது இந்தப்பறவ அறியாது
உறவும் தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூமொளச்சு பார்த்தவுக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்
இப்பாடலின் வீடியோ இங்கே..
Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape