படம் : அக்னி நட்சத்திரம்
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா
இசை : இளையராஜா
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
வா வா அன்பே அன்பேபாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா
இசை : இளையராஜா
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வானம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசந்தம்
வா வா அன்பே அன்பே ...
நீளம் கொண்ட கண்ணும்
மேகம் கொண்ட நெஞ்சும்
காலம்தோறும் என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
பாயை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த நானே
இதயம் முழுதும் எனது வசந்தம்
வா வா அன்பே அன்பே ...
கண்ணன் வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
கண்கள் தீரும் காதல் எனும் ஓவியம்
காற்று வாங்கும் மூச்சிலும்
கண்ணி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
உன் தோலில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசந்தம்
வா வா அன்பே அன்பே ...
இப்பாடலின் வீடியோ இங்கே..