RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

சிறகுகள் வந்தது

படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஜாவேட் அலி, மதுஸ்ரீ
விரும்பி கேட்டவர்: அர்ச்சனா.N.M

சிறகுகள்
வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்த்தது உள்ளே செல்ல
சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ
உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

கனவுகள் பொங்குது..
.

நதியே நீ எங்கே என்று
கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேடக் கூடாதா ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடைப்பதை யார் அறிவார்
கடல் நொடியின் கிடக்கும்
பலரின் கனவுகள் யார் அறிவார்
அழகே நீ எங்கே இருக்கிறாய்
வழித்தால் அன்பே நீ எங்கே இருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் நெஞ்சம்
எங்கே பூவின் உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே

உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில்
உள்ளே வழியே..

சிறகுகள் வந்தது..

எனக்கே நான் சுமையாய் மாறி
என்னை சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னை தேடி வந்தேனே
விழி நினைக்கிற நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடிக்கும் முன்னே
எந்தன் உயிர் ஒதுக்கி விடாது
உலகம் ஒரு புள்ளி யாதுவே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுகமோ வழியோ எல்லை மீறுதே

சிறகுகள்..
இப்பாடலின் வீடியோ இங்கே..
Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape